எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 31 மே, 2013

அநுராதபுர மாவட்ட பிரதேச அடையாளக் கவிதைகள் பற்றிய ஒரு வாசிப்பு - எல். வஸீம் அக்ரம்

70 வருடங்களுக்கு மேலாகத்  தமிழ்ப் பணியாற்றிவரும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள “ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறியும் பிரதேச இலக்கியங்களும் “ என்ற தலைப்பிலான இருநாள் ஆய்வரங்கு நேற்று (18)  கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ‘சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ’ஆரம்பமானது.
முதல்நாள் காலை நிகழ்ச்சியாக, வடமேல் , வடமத்திய பிரதேசத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள்  ‘ உடப்பு  பெரி.சோமாஸ்கந்தர் அரங்கில் ‘  நடைபெற்றன.
இந்த ஆய்வரங்குக்கு  புத்தளத்தைச் சேர்ந்த கவிஞர் கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் தலைமை வகித்தார்.
பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் (புத்தளம்)  ” அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் இலக்கியப் பிரக்ஞையும் போக்குகளும் ”  என்ற தலைப்பிலும்
 உடப்பூர் வீரசொக்கன் ( புத்தளம் ) ” உடப்புப் பிராந்திய கூத்துக் கலையும் நாடக வளர்ச்சியும் அவற்றின் பின்புலமும் ” என்ற தலைப்பிலும்
எல். வஸீம் அக்ரம் (அனுராதபுரம்)   ” அனுராதபுரப் பிரதேசக் கவிதைகள் பற்றிய ஒரு வாசிப்பு ” என்ற தலைப்பிலும்  
கே.ஸ்ரீஸ்கந்தராஜா (புத்தளம்)  ” புத்தளம் , சிலாபம் பிரதேசத்தின் புனைகதை முயற்சிகள் – சில அவசரக் குறிப்புகள் ”  என்ற தலைப்பிலும் ஆய்வுரைகளை நிகழ்த்தினர்.
கவிஞர்கள் நாச்சியாதீவு பர்வீன் , மேமன்கவி ஆகியோர் இவ்வாய்வரங்கு தொடர்பாகக் கருத்துரை வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக