எனது வலைப்பதிவு பட்டியல்

வெள்ளி, 31 மே, 2013

எல். வஸீம் அக்ரம் அவர்களுக்கு கௌரவம்

ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறியும் பிரதேச இலக்கியங்களும் “ என்ற தலைப்பிலான இருநாள் ஆய்வரங்கு 2013.05.18 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ‘சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ’நடந்தது.

இந்நிகழ்வில் “அநுராதபுர மாவட்ட பிரதேச கவிதை அடையாளம் பற்றிய ஒரு வாசிப்பு” என்ற ஆய்வை சமர்ப்பித்த மைக்காக வஸீம் அக்ரம் அவர்களுக்கு தமிழ்ச் சங்க உறுப்பினர்களால் அளிக்கபட்ட சின்னத்துடன் காட்சி தருகின்றார். 

அருகில் ஆய்வரங்கில் கலந்துகொணடவர் பேராசிரியரகள் மற்றும் ஆய்வாளர்களைக் காணலாம்

அநுராதபுர மாவட்ட பிரதேச அடையாளக் கவிதைகள் பற்றிய ஒரு வாசிப்பு - எல். வஸீம் அக்ரம்

70 வருடங்களுக்கு மேலாகத்  தமிழ்ப் பணியாற்றிவரும் கொழும்புத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள “ஈழத்துத் தமிழ் இலக்கியச் செல்நெறியும் பிரதேச இலக்கியங்களும் “ என்ற தலைப்பிலான இருநாள் ஆய்வரங்கு நேற்று (18)  கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ‘சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ’ஆரம்பமானது.
முதல்நாள் காலை நிகழ்ச்சியாக, வடமேல் , வடமத்திய பிரதேசத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள்  ‘ உடப்பு  பெரி.சோமாஸ்கந்தர் அரங்கில் ‘  நடைபெற்றன.
இந்த ஆய்வரங்குக்கு  புத்தளத்தைச் சேர்ந்த கவிஞர் கலாபூஷணம் ஜவாத் மரைக்கார் தலைமை வகித்தார்.
பேராசிரியர் கலாநிதி எம்.எஸ்.எம்.அனஸ் (புத்தளம்)  ” அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் இலக்கியப் பிரக்ஞையும் போக்குகளும் ”  என்ற தலைப்பிலும்
 உடப்பூர் வீரசொக்கன் ( புத்தளம் ) ” உடப்புப் பிராந்திய கூத்துக் கலையும் நாடக வளர்ச்சியும் அவற்றின் பின்புலமும் ” என்ற தலைப்பிலும்
எல். வஸீம் அக்ரம் (அனுராதபுரம்)   ” அனுராதபுரப் பிரதேசக் கவிதைகள் பற்றிய ஒரு வாசிப்பு ” என்ற தலைப்பிலும்  
கே.ஸ்ரீஸ்கந்தராஜா (புத்தளம்)  ” புத்தளம் , சிலாபம் பிரதேசத்தின் புனைகதை முயற்சிகள் – சில அவசரக் குறிப்புகள் ”  என்ற தலைப்பிலும் ஆய்வுரைகளை நிகழ்த்தினர்.
கவிஞர்கள் நாச்சியாதீவு பர்வீன் , மேமன்கவி ஆகியோர் இவ்வாய்வரங்கு தொடர்பாகக் கருத்துரை வழங்கினர்.