எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம்

அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா?

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வடமத்திய மாகாண சபையில் குறிப்பாக அநுராதபுரம் மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் சார்பாக பிரதிநிகளின் தேவையானது இன்றைய கால கட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்றாக இருப்பது கவனிக்கத்தக்கது.கடந்த காலங்களைவிட சமகாலத்தில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை அடைந்து கொள்வதுடன், முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதி செது அவர்களது வாழ்வாதார அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்கு தொடர்ச்சியாக ஒலித்துவந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் இம்முறை காப்பற்றப்படுமா அல்லது இழக்கப்படுமா என்பதே இன்று சகல தரப்பினரதும் அவாவாக உள்ளது. சுமார் 10 வீதம் வாழ்கின்ற இவ் அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம்களின் குரல் வடமத்திய மாகாண சபையில் ஒலிப்பதற்கு குறைந்தபட்சத் தேர்வுகளையாவது இம்மக்கள் அடைந்து கொள்ளவேண்யதை சகலரும் உணர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

அநுராதபுர மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் சுமார் 110 முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செயப்பட்ட வாக்காளர்கள் இருகின்றார்கள் அல்லது இருக்க வேண்டும். (எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றார்கள் என்ற ஆவு ரீதியான தரவுகள் எந்தவொரு தரப்பினரிடமும் இதுவரை இல்லை) ஆனால் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் சுமார் 2000 வாக்குகள் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளருக்கும் அளிக்கப்படுவல்லை. ஏனைய வாக்குகளில் சுமார் 65 வீதாமானவை ஐ.தே.கட்சிக்கு அல்லது அதன் கூட்டணிக்கு அளிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 
இந்த வாக்காளர்களால் இம்முறை இரண்டுக்கு மேற்பட்ட மாகாணப் பிரதிநிதிகளை தமது சமூகத்தின் இருப்பு சார்பாக இந்த மக்கள் தெவு செயய வேண்டும் என்ற அவாவுடன் இக்குறிப்புகளை பதிவு செய விளைகிறேன்.
மாகாண சபை தொடங்கிய முதலாவது தேர்தல் 3 முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செயப்பட்டனர். அவர்கள் அனைவரும் அப்போதைய அரசாங்கமான ஐ.தே.கட்சியைப் பிரதிநித்துவம் செதிருந்தனர்.
அதற்குப் பிற்பட்ட எல்லா தேர்தல்களிலும் அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக மு.கா. வேட்பாளர் ஒருவர் தெரிவு செயபட்டே வந்துள்ளர். கடந்த தேர்தலில் ஐ.தே. கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து மு.கா. போட்டியிட்டதனால் அந்தக் கூட்டணியிலிருந்து ஐ.தே. கட்சியின் முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெற்றிருந்தார். 
கடந்த மாகாண சபைத் தேர்தலை எடுத்துக் கொண்டால், மு.காங்கிரஸ் ஐ.தே.க. கூட்டணியிலும், அ.இல.முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சு. முன்னணியுடன் இணைந்தும் போட்டியிட்டதுடன், தேசிய காங்கிரஸ் தனியாகவும் போட்டியிட்டது. 
கடந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் ஐ.தே.க.கூட்டணியில் போட்டியிட் இரு முஸ்லிம் வேட்பாளர்களும் தெரிவு செயப்பட்டனர்.அதில் ஒருவர் சுமார் 18000 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.   
தனித்துப் போட்டியிட்ட தேசிய காங்கிரஸ் சுமார் 2500 வாக்குகளையும் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர் சுமார் 8500 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.    
கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி முஸ்லிம் வேட்பாளர் சுமார் 10500 வாக்குகளையும் ஐ.ம.சு.முன்னணியின் முஸ்லிம் வேட்பாளர் சுமார் 11500 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 
ஆனால் இம்முறை தேர்தல் களம் சற்று மாறுபட்ட தோற்றத்தை காட்டி நிற்கின்றது. மு.கா.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதனால் தனது வேட்பாளர் ஒருவரையும் ஐ.ம.சு. முன்னணி ஒரு வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது. தவிர ஐ.தே.கட்சி இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதனால் இம்முறை இரு முனை தீவிரப் போட்டி முஸ்லிம் பிரதிநித்துவத்திற்காக நிலவுகின்றதை அவதானிக்க முடிகின்றது. 
இம்முறை ஐ.ம.சு. முன்னணியுடன் மு.கா. இணைந்து போட்டியிடுவதால் ஐ.ம.சு. முன்னணிக்கு சற்று பலமான இருப்புத் தென்படுகின்றது. அதேவேளை ஐ.தே.கட்சி தமது பங்கிற்கு 2 வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளதால் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட இடமிருப்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த மாகாண சபையில் ஐ.ம.சு.முன்னணி 220000 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும் ஐ.தே.க 140000 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களையும் ம.வி.மு 16000 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன. 
கடந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்டு 13 ஆம் இடத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் சுமார் 10500 வாக்குகளைப் பெற்றிருந்த அதேவேளை ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு 7ம் நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர் சுமார் 14000 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இம்முறை களநிலைவரத்தின்படி ஐ.ம.சு. முன்னணியின் வெற்றி என்பது உறுதியிட்டுக் கூறமுடியுமாக இருக்கின்றது. இதனை ஐ.தே.க.வின் பிரசார மேடைகளிலேயே அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் இரு பெரும் கட்சிகளில் இருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் வெற்றிபெற வேண்டுமாயின் இரு கட்சிகளிலும் முன்னர் குறிப்பிட்ட இறுதிநிலை வேட்பாளர்களின் அடைவை குறைந்தபட்சம் தொட வேண்டும். 
அப்படியாயின் அநுராதபுர மாவட்டத்தில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செது கொள்வதற்கு பின்வரும் உத்திகளை கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
1. சுமார் 60 வீதமான மக்கள் ஐ.ம.சு.முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும். அல்லது
2. சுமார் 70 வீதமான மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். 
3. அத்துடன் வாக்களிக்கின்ற முஸ்லிம்கள் இரு கட்சிகளிலுமுள்ள முஸ்லிம்கள் இருவருக்கும் வாக்களிப்பதுடன் அடுத்த விருப்பு வாக்கை முதல் தர ஓரிரண்டு வேட்பாளர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும்.
4. அல்லது திட்டமிட்ட அடிப்படையில் குறிப்பிடத்தக்க பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளுடன் 50:50 என்ற விகிதாசாரத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் அளிக்கப்படுதல் வேண்டும்.இந்த முறைகளின் ஊடாகவே முஸ்லிம் பிரதிநித்துவம் வெற்றி கொள்ளப்பட வாப்பிருக்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக