எனது வலைப்பதிவு பட்டியல்

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம்

அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுமா?

வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வடமத்திய மாகாண சபையில் குறிப்பாக அநுராதபுரம் மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் சார்பாக பிரதிநிகளின் தேவையானது இன்றைய கால கட்டத்தில் மிக இன்றியமையாத ஒன்றாக இருப்பது கவனிக்கத்தக்கது.கடந்த காலங்களைவிட சமகாலத்தில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை அடைந்து கொள்வதுடன், முஸ்லிம் சமூகத்தின் இருப்பை உறுதி செது அவர்களது வாழ்வாதார அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்கு தொடர்ச்சியாக ஒலித்துவந்த முஸ்லிம் பிரதிநிதித்துவம் இம்முறை காப்பற்றப்படுமா அல்லது இழக்கப்படுமா என்பதே இன்று சகல தரப்பினரதும் அவாவாக உள்ளது. சுமார் 10 வீதம் வாழ்கின்ற இவ் அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம்களின் குரல் வடமத்திய மாகாண சபையில் ஒலிப்பதற்கு குறைந்தபட்சத் தேர்வுகளையாவது இம்மக்கள் அடைந்து கொள்ளவேண்யதை சகலரும் உணர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. 

அநுராதபுர மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் சுமார் 110 முஸ்லிம் கிராமங்கள் இருக்கின்றன. இம்மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செயப்பட்ட வாக்காளர்கள் இருகின்றார்கள் அல்லது இருக்க வேண்டும். (எத்தனை வாக்காளர்கள் இருக்கின்றார்கள் என்ற ஆவு ரீதியான தரவுகள் எந்தவொரு தரப்பினரிடமும் இதுவரை இல்லை) ஆனால் சுமார் 30 ஆயிரம் வாக்குகள் ஒவ்வொரு தேர்தலிலும் அளிக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதில் சுமார் 2000 வாக்குகள் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளருக்கும் அளிக்கப்படுவல்லை. ஏனைய வாக்குகளில் சுமார் 65 வீதாமானவை ஐ.தே.கட்சிக்கு அல்லது அதன் கூட்டணிக்கு அளிக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 
இந்த வாக்காளர்களால் இம்முறை இரண்டுக்கு மேற்பட்ட மாகாணப் பிரதிநிதிகளை தமது சமூகத்தின் இருப்பு சார்பாக இந்த மக்கள் தெவு செயய வேண்டும் என்ற அவாவுடன் இக்குறிப்புகளை பதிவு செய விளைகிறேன்.
மாகாண சபை தொடங்கிய முதலாவது தேர்தல் 3 முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செயப்பட்டனர். அவர்கள் அனைவரும் அப்போதைய அரசாங்கமான ஐ.தே.கட்சியைப் பிரதிநித்துவம் செதிருந்தனர்.
அதற்குப் பிற்பட்ட எல்லா தேர்தல்களிலும் அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம்கள் சார்பாக மு.கா. வேட்பாளர் ஒருவர் தெரிவு செயபட்டே வந்துள்ளர். கடந்த தேர்தலில் ஐ.தே. கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து மு.கா. போட்டியிட்டதனால் அந்தக் கூட்டணியிலிருந்து ஐ.தே. கட்சியின் முஸ்லிம் வேட்பாளரும் வெற்றி பெற்றிருந்தார். 
கடந்த மாகாண சபைத் தேர்தலை எடுத்துக் கொண்டால், மு.காங்கிரஸ் ஐ.தே.க. கூட்டணியிலும், அ.இல.முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சு. முன்னணியுடன் இணைந்தும் போட்டியிட்டதுடன், தேசிய காங்கிரஸ் தனியாகவும் போட்டியிட்டது. 
கடந்த மாகாண சபைத் தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொண்டால் ஐ.தே.க.கூட்டணியில் போட்டியிட் இரு முஸ்லிம் வேட்பாளர்களும் தெரிவு செயப்பட்டனர்.அதில் ஒருவர் சுமார் 18000 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.   
தனித்துப் போட்டியிட்ட தேசிய காங்கிரஸ் சுமார் 2500 வாக்குகளையும் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர் சுமார் 8500 வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.    
கடந்த பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி முஸ்லிம் வேட்பாளர் சுமார் 10500 வாக்குகளையும் ஐ.ம.சு.முன்னணியின் முஸ்லிம் வேட்பாளர் சுமார் 11500 வாக்குகளையும் பெற்றிருந்தனர். 
ஆனால் இம்முறை தேர்தல் களம் சற்று மாறுபட்ட தோற்றத்தை காட்டி நிற்கின்றது. மு.கா.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதனால் தனது வேட்பாளர் ஒருவரையும் ஐ.ம.சு. முன்னணி ஒரு வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது. தவிர ஐ.தே.கட்சி இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இதனால் இம்முறை இரு முனை தீவிரப் போட்டி முஸ்லிம் பிரதிநித்துவத்திற்காக நிலவுகின்றதை அவதானிக்க முடிகின்றது. 
இம்முறை ஐ.ம.சு. முன்னணியுடன் மு.கா. இணைந்து போட்டியிடுவதால் ஐ.ம.சு. முன்னணிக்கு சற்று பலமான இருப்புத் தென்படுகின்றது. அதேவேளை ஐ.தே.கட்சி தமது பங்கிற்கு 2 வேட்பாளர்களை களத்தில் நிறுத்தியுள்ளதால் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட இடமிருப்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த மாகாண சபையில் ஐ.ம.சு.முன்னணி 220000 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களையும் ஐ.தே.க 140000 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களையும் ம.வி.மு 16000 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன. 
கடந்த தேர்தலில் ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட்டு 13 ஆம் இடத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் சுமார் 10500 வாக்குகளைப் பெற்றிருந்த அதேவேளை ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு 7ம் நிலையில் வெற்றி பெற்ற வேட்பாளர் சுமார் 14000 வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இம்முறை களநிலைவரத்தின்படி ஐ.ம.சு. முன்னணியின் வெற்றி என்பது உறுதியிட்டுக் கூறமுடியுமாக இருக்கின்றது. இதனை ஐ.தே.க.வின் பிரசார மேடைகளிலேயே அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் இரு பெரும் கட்சிகளில் இருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் வெற்றிபெற வேண்டுமாயின் இரு கட்சிகளிலும் முன்னர் குறிப்பிட்ட இறுதிநிலை வேட்பாளர்களின் அடைவை குறைந்தபட்சம் தொட வேண்டும். 
அப்படியாயின் அநுராதபுர மாவட்டத்தில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் தமது பிரதிநிதியை தெரிவு செது கொள்வதற்கு பின்வரும் உத்திகளை கவனிக்க வேண்டியது அவசியமாகும்.
1. சுமார் 60 வீதமான மக்கள் ஐ.ம.சு.முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும். அல்லது
2. சுமார் 70 வீதமான மக்கள் ஐ.தே.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். 
3. அத்துடன் வாக்களிக்கின்ற முஸ்லிம்கள் இரு கட்சிகளிலுமுள்ள முஸ்லிம்கள் இருவருக்கும் வாக்களிப்பதுடன் அடுத்த விருப்பு வாக்கை முதல் தர ஓரிரண்டு வேட்பாளர்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும்.
4. அல்லது திட்டமிட்ட அடிப்படையில் குறிப்பிடத்தக்க பெரும்பான்மைச் சமூகத்தின் வாக்குகளுடன் 50:50 என்ற விகிதாசாரத்தில் முஸ்லிம்களின் வாக்குகள் அளிக்கப்படுதல் வேண்டும்.இந்த முறைகளின் ஊடாகவே முஸ்லிம் பிரதிநித்துவம் வெற்றி கொள்ளப்பட வாப்பிருக்கிறது. 

வஸீம் அக்ரம் பழைய புகைப்படங்கள்



எல்.வசீம் அக்ரம் புகைப்படங்கள்

சனி, 8 டிசம்பர், 2012

அநுராதபுரம் முஸ்லிம்களின் வரலாற்று ஆவணம்

'அநுராதபுரத்தின் முதுசொம்'

பூர்வீக கதவுகளைத் தட்டும் 

வரலாற்று ஆவணங்கள் மீதான வாசிப்பு

-    எல். வஸீம் அக்ரம்


இலங்கையின் வரலாற்றில் அநுராதபுரப் பிரதேசம் தனித்துவமிக்க ஒன்றாக இருக்கின்றது என்ற கருத்து வரலாற்று ஆய்வாலர்களால் அடிக்கடி முன்மொழியப்படுகின்றது. இவ்வாறு தவிர்க்க முடியாத ஒரு பிரதேசத்தின் சிறுபான்மை சமூகத்தின் இருப்பை ஆவணப்படுத்த வேண்டிய தேவை அந்தந்த சமூகங்களுக்கு இருக்கின்றது. அவ்வாறான ஒரு பணியை அநுராதபுரம் முதுசம் நிறைவேற்றியுள்ளது என்று புலங்காகிதமடைகிறோம்.

அத்துடன் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை ஆய்வு செய்கின்ற அல்லது செய்யப்பட்ட ஆய்வுகளின் முக்கிய கருப்பொருளில் அநுராதபுரத்து இரசாதானியிலிருந்து ஆய்வு செய்ய வேண்டும் என்பது அநுராதபுர முதுசத்தின் பிரதான அடைவாக இருக்கின்றது. தவிரவும் அநுராதபுர மாவட்ட முஸ்லிம்களின் அநுராதபுர நகரப் பிரதேச வாழ் மக்களின் வரலாற்று ஆவணங்களை பூர்வீகம், அரசியல், சமூகவியல், பண்பாடு, நாகரீகம், கல்வி மற்றும் கலை இலக்கியம் என்ற பல்வேறு துறைகள் ஊடாக இன்றுவரையுள்ள விடயங்களையும் அறிந்திடாத முதுசங்களையும் அநுராதபுரம் முதுசொம் என்ற ஆவணம் நமக்கு கோடிட்டுக் காட்டியுள்ளது.

இவ்வாவணம் அநுராதபுரத்தில் சேவை பத்து வருடங்களுக்கு மேல் அரச சேவையில் சேவை செய்து, ஓய்வுபெற்ற ஊழியர்களை கௌரவிக்கும் விழாவில் வெளியிடப்பட்டதாகும். இவ்வாண காப்பகத்தை நூலாக்கியவர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள். இந்த சமூகத் தேவையை உதவியவர் அல்ஹாஜ் எச்.எஸ்.ஏ. முத்தலிப் அவர்கள்.

இன்று அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள் தமது இருப்பை பதிவு செய்வதில் அவர்களது வரலாறு தொடர்பான தவறான புரிதல்கள் இருப்பதானல் இவ்வநுராதபுர முதுசொம் இந்த சமூகத்திற்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு அலப்பரிய சாதனையை நிறைவேற்றியுள்ளது என்று முகுடம் சூட்டலாம். வெறும் வார்த்தை கதையாடல்களுடாக சிறுபான்மைச் சமூகத்தின் இருப்பை விலைபேசிக் கொண்டு இருக்கின்ற அரசியல் சூழ்நிலையில் ஆவண ரீதியாக மட்டும் பேச விளைகின்ற இவ்வாறான முயற்சியை நாம் முன்னின்று வாழிநடத்தவும் வாழ்த்தவும் வேண்டும்.

காலம் காலமாக முஸ்லிம் சமூகத்தை ஒரு வியாபார சமூகமாக பேச விளைகின்ற இன்றில் அதற்கு ஒரு படி மேலே சென்று கிட்டத்தட்;ட பல நூறு ஆண்டுகள் பின் சென்று அநுராதபுர நகர முஸ்லிம்களின் வரலாற்றை ஆவணமாக்கியுள்ளனர்.

இந்நூலில் அல்லது ஆவணத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.பி.எம். ஹூசைன் அவர்களின் 'அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்' என்ற கட்டுரையும், ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிகான் அவர்கள் எழுதிய 'ம(று)றைக்கப்படும் வரலாறு' என்ற கட்டுரையும் நூலராசியர் கலாபூஷணம் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் எழுதிய 'அநுராதபுரம் முஸ்லிம்களின் பல்வேறு பதிவுகள்' என்ற  கட்டுரையும் நூலுக்கு மகுடம் சேர்க்கின்றன.

இந்நூலில் உள்ள சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.பி.எம். ஹூசைன் அவர்களின் 'அநுராதபுரத்தில் முஸ்லிம்கள்' என்ற கட்டுரை, அநுராதபுர முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றைப் பேசுகின்றதுடன் பாரம்பரியங்களையும் பேசுகின்றன. அவற்றில் குடியேற்றங்கள், குடிப்பரம்பல்கள், அம்மக்களின் ஆரம்ப வாழ்வு பற்றி நிறைவாகப் பேசுகின்றன.

ஆய்வு முகாமையாளர் எம்.எம். அலிகான் அவர்கள் எழுதிய 'ம(று)றைக்கப்படும் வரலாறு' என்ற கட்டுரை பிந்திய குடியேற்றங்கள், அவற்றின் பெயர்வு, அதற்கு பின்னணியான அரசியல் முறைகள் இன அச்சுறுத்தல்கள் என்பன பற்றிய விடயங்கள் ஆதாரபூர்வமாக சுட்டப்பட்டுள்ளன. இவ்விரண்டு கட்டுரைகளும் வரலாற்றின் தன்மையை பேசுகின்றது.

இவ்வொவொரு கட்டுரையின் பின் புலத்திலும் அநுராதபுர முஸ்லிம்களின் வரலாறு பின்வருமாறு பதிவு செய்யப்படுகின்றது.

கி.மு 6ம் நூற்றாண்டில் விஜயனின் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இலங்கை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே, இலங்கையில் அராபியர், பாரசீகர், எகிப்தியர் எனும் முஸ்லிம்களின் வழித்தோன்றல்கள் வாழ்ந்ததற்கான, வர்த்தக நோக்கத்திற்காக பயணத்ததிற்கான சான்றுகள் உள்ளன எனக் கூறி, அச்சான்றுகளையும் இவர் இக்கட்டுரையினூடாக முன்வைத்துள்ளார். முஸ்லிம்கள் அநுராதபுர நகரின் திசாவௌகம, பொன்னாரங்குளம், கும்பிச்சங் குளம், ஆமன்னரத்மல, நாச்சியாதுவ ஆகிய பிரதேசங்களில் தமது ஆரம்ப குடியிருப்புக்களை நிறுவினர் எனத் தொடரும் இவரது கட்டுரை இன்னும் பல விடயங்களை முன்வைக்கின்றது.

மேலும் அநுராதபுரத்தை ஆண்ட பண்டுகாபய மன்னன் தொடக்கம் பல மன்னர்கள் அரேபியர்களுடன் கொண்டுள்ள வர்த்தக தொடர்புகள் பற்றியும் இக் கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது. அக் கால கட்டத்தில் கச்சுத்தோட்டம், இசுறுமுனி, வெஸ்ஸகிரிய, ஒட்டுப்பள்ளம், திசாவௌகம, மிரிசுவெட்டி போன்ற இடங்கள் முஸ்லிம்களின் குடியிருப்புக்களாக விளங்கின. சிங்கள மன்னரின் கீழ் 'விதானை'யாக சேவையாற்றிய 'முத்து விதானை அசனார்' என்பவரின் வீட்டிலுள்ள இரு கற்றூணில் அவரது பெயர் முதலெழுத்துக்களைக் குறிக்கும் 'மு.அ' எனும் தமிழ் ஈர் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

என்ற தகவல்களைப் பதிவு செய்துள்ளன. இவ்வாவணக் காபகத்தில் அநுராதபுரம் முஸ்லிம்களின் பல்வேறு பதிவுகள் என்ற கட்டுரை முன்னர் குறிப்பிட்ட ஏனைய இரு கட்டுரைகளிலும் இருந்து சற்று வேறுபட்டு மிக அண்யைத் (பிந்திய தகவல்கள்) தரவுகள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பிந்திய தரவுகள் குறிப்பாக முஸ்லிம்களின் இன்றைய கல்வி, கலை இலக்கிய, சமயம் என்ற பெரும் பண்புகளால் நிறுவப்பட்டுள்ளன. 19ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய தகவல்கள் குறிப்பிட்டுச் சொல்லுளவுக்கு எந்த ஒருவரிடமும் இருக்கவில்லை. அவற்றை வாய்மூலமாக மட்டுமன்றி குப்பைத் தொட்டிகளிலுள்ள ஆவணங்கள் வரை கிளறி எடுத்து ஆவணமாக பேச முனைந்துள்ளதை இங்கு விதந்து குறிப்பிட வேண்டும்.

ஒரு கல்வியலாளராக, இலக்கிய கர்த்தவாக, ஆய்வாளராக, சமூக சேவகராக என்ற பல்பரிமாண முகங்கொண்டு அன்பு ஜவஹர்ஷா இந்த ஆவணங்களைப் பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவுகளில் உள்ள புகைப்படங்கள் முஸ்லிம்களின் மிக நுண்ணிய பிரச்சினைகளையும் பூர்வீக புதிவகள் மற்றும் களைவுகளையும் முன்னிறுத்தியுள்ளதை மனங்கொள்ள வேண்டும். ஆய்வு மாணவனாக சமூகத்தின் சகல விடயங்களின்பால் தன்னை செயற்படுத்தி தன்னை விஞ்சிய பணியை செய்துள்ளதாக புகழ முடியும்.

இந்தக் கட்டரையில் சமயம், கல்வி, கலை இலக்கியம், அரசியல்  தொடர்பான அரிய தகவல்கள் பதியப்பட்டுள்ள. அவற்றில் துறைசார் நிறுவனங்களின் மூலம், தோற்றம், அதன் பின்புலம், அவற்றுக்கு பணியாற்றியவர்களின் பெயர்கள் அவர்களின் பணி முறைகள் என்ற விடயங்கள் மிக விரிவாகவும் நுட்பமாகவும் பொறுப்புடனும் பதிவுகளாக இருக்கின்றன. அவற்றிலிருந்து சிலவற்றைப் பதிவு செய்கிறேன்.

1870 ம் ஆண்டு திசாவௌ குளத்தின் மத்தியில் காணப்பட்ட பள்ளிவாசல் உள்ளிட்ட பௌத்த மத வணக்கஸ்தலம் அல்லாத மத வழிப்பாட்டுத் தளங்கள் அகற்றப்பட்டன என்ற இனப்பிரிப்புச் செய்தி இங்கு பதியப்பட்டுள்ளது. இவற்றுடன் அநுராதபுர பள்ளிவாசல்கள் ஒட்டுப்பள்ளம் தர்கா உள்ளிட்ட தற்போதைய பள்ளிவாசல் நிர்மாணம் பற்றிய தகவல்களையும், அவற்றுடன் தொடர்புடைய பின்னணித் தகவல்களையும், மத்ரஸா, தக்கியா, அரபுக் கல்லூரிகளுட்பட்ட மார்க்கக் கடமைகளை மேற்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் ஆதாரபூர்வமாக இவர் முன்வைத்துள்ளார். இங்கு விதந்து குறிப்பிட வேண்டி ஒரு விடயம் 2012ம் ஆண்டு உடைக்கப்பட்ட ஒட்டுப்பள்ளம் தர்காவின் வரலாறும் அதே ஆண்டு தீக்கிரையாக்கப்பட்ட தக்கியா பற்றிய பதிவுகளும் இங்கு இருக்கின்றரதாகும்.

கல்வி தொடர்பான ஆய்வில் பாடசலைகளின் தோற்றம், அதில் பதிவு செய்த மாணவர்கள் மற்றும் இன்னும் அரிதான தகவல்களைப் பதிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்கது. அநுராதபுர நகரில் உள்ள ஸாஹிரா மகா வித்தியாலயம், விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலம் ஆகிய இரு பாடசாலைகளின் தோற்றம், வளர்ச்சி என்ப இங்கு பதிவாகியுள்ளதுடன், அவற்றின் தோற்றத்திற்கு முன் இவர்களது கல்வி முறை பற்றி பதிவுகளும் காணப்படுகின்றன. (கட்டுரையில் உள்ள விடயங்களை சுருக்கமாக பதிவு செய்கிறேன்)

இந்நூலில் தொகுக்கபட்டுள்ள காலை இலக்கியம் சார்ந்த பதிவுகள் ஏலவே பல்வேறு கட்டரைகள் வாயிலாக (அன்பு ஜவஹர்ஷா) பேசப்பட்டிருந்தமையினால் அவற்றினை மிக எளிய வடிவங்களைக் குறிப்பிடலாம். கலை இலக்கியங்கள் காலத்தின் பதிவுகள் என்ற அடைமொழியை அவை நிறுவியுளுள்ளன. குறிப்பாக அநுராதபுரத்திலிருந்து வெளிவந்த கலை இலக்கிய ஆவணங்களையும் வெளிவரும் சஞ்சிகைகள் பற்றிய குறிப்புக்களும் தொடர் அடிப்படையில் காட்டப்பட்டுள்ளன. அவையாவன:

•    சிக்கந்தர் மகத்துவக்கும்மி (1928 -முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
•    விதி-அறிவு-விளக்கம் (1938-முஹம்மதி மீரா லெப்பை ஆலிம் சாய்பு,)
•    கைபுட்சிக மாலை (உமர்லெப்பை ஆலிம் சாய்பு - அநுராதபுரத்தில் வெளியீடு)
•    தமிழ்மணி கையெழுத்துச் சஞ்சிகை (எம்.எஸ்.ஹூசைன்)
•    இளைஞர் குரல் (இரு ஆசிரியர்களுள் ஒருவர் மர்ஹூம் அமீர் சுல்தான்)
•    மாணவர் குரல் (அண்டன் ஞானராஜா)
•    தமிழ்ச்சுடர் (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா)
•    புத்தொளி (ஆசிரியர்களுள் ஒருவர் அன்பு ஜவஹர்ஷா)
•    வீரத் தமிழன் (மர்ஹூம் எஸ்.எச். எம்.ஸஹீர் )
•    தேன்துளி (மர்ஹூம் எஸ்.எம். ஸாலிஹ்)
•    பிறையொளி பாடசாலைச் சஞ்சிகை (அன்பு ஜவஹர்ஷா)
•    பொறிகள் - தெகுக்கபட்ட கவிதைகள் (அன்பு ஜவஹர்ஷா)
•    காவிகளும் ஒட்டுண்ணிகளும் - (அன்பு ஜவஹர்ஷா)
•    அன்னை (எப். ஆர் பரீட்ஹ்)
•    அல் மதீனா (எப். ஆர் பரீட்ஹ்)
•    தொலைச்சுடர் (ஜன்ஸி கபூர் )
•    அநுராகம் (ஜன்ஸி கபூர் , எப். ஆர் பரீட்ஹ், ஏ.பி.எம். அன்சார் )
•    படிகள் (எம். வஸீம் அக்ரம்)


இங்கு பதியப்பட்டுள்ள விடயங்களில் அரச துறைகளில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வரலாறு மிக முக்கியமான பதிவுகளாக கொள்ளலாம். அரச சேவையில் முஸ்லிம்களின் பணி என்பது அப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான மிக முக்கிய ஆவணமாக இருக்கின்றது. இதில் அநுராதபுர இராசதாணி முதல் அரச நிறுவனங்களில் சாதாரண இலிகிதர் வரை சேவையாற்றியவர்களின் அனைத்துவிடயங்களும் அடக்கப்பட்டுள்ளமையை இன்னும் மெச்ச இயலும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் முஸ்லிம் பெண்களின் சமூக கலாசாரப் பணிகள், விளையாட்டுத் துறைகளில் ஈடுபட்டு சாதணைகள் புரிந்தவர்களின் பெயர்கள் என்ற பல்வேறு தரவுகள் தொடர்புற்றும் தொடர்பு படாமலும் பதியப்பட்டுள்ளமை ஈர்ந்து கவனிக்கத்தக்கது.

நூலின் (கட்டுரையின்) பின் இணைப்பாக சேர்க்கப்பட்டுள்ள ஒளிப்படங்கள், ஆவணங்கள் பற்றிக் குறிப்பிடுவது இந்த நூலின் மிக முக்கிய கட்டம் எனலாம். இதில் பல்வேறு ஆவணங்கள் சுமார் 100 ஆண்டுகளை திரும்பிப் பார்க்க வைக்கின்றன. இதில் 1900 களில் அநுராதபுர புதிய நகரப்; பிரதேசத்தில் பிறந்த பிள்ளைகளின் பிறப்பத்தாட்சிப் பத்திரம், அநுராதபுரம் பழைய நகர், புதிய நகருக்கு மாற்றப்பட முன்னர் இருந்த குடியிருப்பு விதியமைப்புத்திட்டங்கள், பிச்சைத் தம்பி முஹதீன் தம்பி என்பவர் 1946ம் ஆண்டு நகர (தற்காலிக) முதல்வராக நியமனம் பெற்ற கடிதத்தின் பிரதி, 1899ம் ஆண்டு அநுராதபுரம் பழைய நகர முஸ்லிம்களின் இருப்பை பதிவு செய்துள்ள மாகாணப் பதிவின் வெளியீட்டு அடையாளம், அந்த ஆவணத்தில் முஸ்லிம்கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள பத்தியின் பக்கப்பிரதி, 1891ல் திசாவௌ எனும் இடத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தாமான காணியொன்றின் உறுதிப்பத்திரம், 1960 ஆண்டு பழைய நகர் பள்ளிவாயலின் பரிபாலன சபை விபரம், 1989.10.18 அன்று பிறந்த பிச்சைத் தம்பி மொஹிதீன் தம்பியின் பிறப்பத்தாட்சிப் பத்திரத்தில் அவரது தந்தையின் தொழில் நகர பாதுகவலர் அநுராதபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஆவணம், அவரது காதி நீதாவன் விண்ணப்பம், 1989ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியின் நில அளவைப் படம், 1957ம் ஆண்டு முதல் முறையாக அகில இலங்கை மட்ட உதைப்பந்தாட்டப் போட்டியில் 9 முஸ்லிம் இளைஞர்கள் கலந்து கொண்டமைக்கான பத்திரிகைச் செய்தி, 1927ம் ஆண்டு ஒட்டுப் பள்ளம் தர்காவில் ராத்தீப் நடத்தியவர்களின் பெயர்ப் பட்டியல், 1959, 1961ம் ஆண்டுகளில் முஸ்லிம்களிடம் பெறப்பட்ட காணிகளுக்கான வர்த்தமாணி, 1958.12.12. அன்று இருந்த முஸ்லிம் வாலிபர் சங்க நிர்வாகிகளின் கடிதம், 1957ம் ஆண்டு சுங்காரு உழவு இயந்திர நிலையத்தில் கனிசமான முஸ்லிம்கள் வாழ்ந்ததந்கான புகைப்படம், 1967களில் நகர முஸ்லிம் இளைஞர்களின் சமூக சேவா நிறுவனத்தின் அங்குரார்ப்பணப் புகைப்படம், 1968ம் ஆண்டு முஸ்லிம் வாலிபர் சங்கத்தினால் கட்டிகொடுக்கப்பட்ட முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் முதல் நாள் சேர்ந்த மாணவர்களின் புகைப்படங்கள், 1967ம் ஆண்டு மே தின ஊர்வலம் நடத்திய முஸ்லிம் சோசலிசக் கட்சியின் ஊர்வலப் புகைப்படம், முஸ்லிம்களின் பூர்வீகத்தை நிறுவுகின்ற மு.அ என்று அழைக்கப்பட்ட முஸ்லிம் பிரதிநிதியின் பெயர் பொறிக்கபட்ட கற்தூண்கள் இரண்டின் புகைப்படம். உள்ளிட்ட இன்னும் பல ஒளிப்படங்கள், புகைப்படங்கள் சமய, சமூக, கல்வி, கலை இலக்கிய, விளையாட்டு மற்றும் அடையாள விடயங்களின் முஸ்லிம்களின் இருப்பை பதிவு செய்கின்ற ஆவணங்கள் இணைக்கபட்டுள்ள.

இந்த ஆவணங்களில் பெரும்பாலனவை மர்ஹூம் அல்ஹாஜ் அமீர் சுல்தான் அவர்களின் ஆவணங்களாக இருப்பது கவனிக்கத்தக்கது.

இந்த சகல பதிவுகளுக்குப் பின்னும், இந்தப் பதிவுகளை ஆவணமாக்கவும் சமூக மாற்றத்திற்காக உழகை;கின்ற ஒரு சக்தியாகவும் இருக்கின்ற தனிமனிதர்களும் குழுக்களும் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இது தவிர இந்த முயற்சி பெரும்பான்மைச் சமூகத்திற்குள் இருக்கின்ற சிறுபான்மைச் சமூகங்களின் இருப்பை பாதுகாக்கின்ற அறிவுபூர்வமான ஒன்றாக கருதலாம். இது அநுராதபுர சிறுபான்மைச் சமூகத்திற்கு மட்டும் உரித்தான குறைந்த பட்ச முயற்சியாக இருப்பினும் இது ஈழத்து ஆவண காப்பாளர்களின் தேவையாக இருக்கின்றது. இவ்வாய்வுக் கட்டுரைகள் மற்றும் ஒளிப்படங்கள், புகைப்படங்கள் என்பன இணையத்திற்கு பதிவேற்றப்பட வேண்டியதன் தேவை இங்கு வழியுறுத்த வேண்டும்.

ஏதிர்காலங்கள் விரல் அடையாளங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படுகின்ற நிலை தோன்றியுள்ள நவ யுக நிலையில் அதற்கான காப்பு முயற்சிகளை இப்போதே ஆரம்பிப்பது சாலச்சிறந்தது என்று பணிவுடன் குறிப்படுகிறேன்.

செவ்வாய், 27 நவம்பர், 2012

வானொலி நாடகப் பயிற்சி நெறி

இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றின் வானொலி நாடகப் பயிற்சி நெறி  -

வானொலி ஊடான வாலுவாக்கம்

வானொலி ஊடான வாலுவாக்கம் : Radio for Advocacy

வானொலி நாடக பயிற்சிப் பட்டறை

-    எல். வஸீம் அக்ரம்


மிக துரித கெதியில் சமூக மாற்றத்திற்கு வழிகோலுகின்ற ஒரு ஊடகாமாக வானொலியை நாம் அடையாளம் காண இயலும். அதனை மனித வலுவாக்க ஊடகம் அல்லது சமூக வலுவாக்க ஊடகம் என்று வரையறை செய்யலாம். வானொலியை சர்வதேச பொது ஊடகம் (ருniஎநசளயட) என்று குறிப்பிடுவர். உலகத்திலே மிக கிரமமாக, விரைவாக நுகரப்படுகின்ற ஊடகம் வானொலி ஆகும். இவ்வானொலி ஊடாகத்தில் நாடகம் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றது.
நாடகம் என்பது ஒரு ஆளும் கலை என்று குறிப்பிடலாம். இதில் வானொலி நாடகம் செவிகளால் நுகரப்பட்டு காட்சிப் புலன்களை கண்ணால் பார்;க்கின்ற ஒலியின் கலை என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தக் கலை இன்று பல்கிப் பெருகியுள்ள வானொலி ஊடகத்தால் நுட்பமான தன்மைகள் கொண்டு ஒழுங்கமைக்கப்படுகின்றதா என்ற விமரிசனத்தை அடிக்கடி வாசிக்க முடிகின்றது. (இது தமிழில் குறிப்பாக முஸ்லிம் நிகழ்ச்சியில் ஏன் தூக்கப்பட்டது என்பதே இன்றுள்ள ஆர்வளர்களின் கேள்வியாகும்)
இவ்வாரான விமரிசனங்கள் முன் வானொலி நாடகத்திற்கான ஒரு முழுமையானதும் சர்வதேச தரமிக்கதுமான ஒரு பயிற்சிப்பட்டரையை அண்மையில் முஸ்லிம்களுக்கான செயலகம் (ளுகுஆ) இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர்கள் மன்றத்துடன் இணைந்து (ளுனுதுகு) நடத்தியது. இந்நிகழ்வுக்கான ஊடக அனுசரணையை விடிவெள்ளி வழங்கியிருந்தது.
வானொலி நாடகம் சுமார் 6 தசாப்தாகால வரலாற்றைக் கொண்டது. இது ஒலி அரங்கு, ஒலி உலகு, ஒலிப் புனைவு என்று பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்டுகின்றது. இந்த வனொலி நாடகத்திற்கு இலங்கை (வானொலி) ஊடக வரலாற்றில் குறிப்பிடத்தக்க பக்கங்கள் இருக்கின்றன. அதிலும் விசேடமாக முஸ்லிம் வானொலி நாடகம் தமிழ் வானொலியை சர்வமயப்படுத்த பெரும் தூணாக இருந்துது. இந்தப் வரலாற்றுப் பக்கங்கள் கறுப்பு, வெள்ளை என்ற இரு நிறங்களாலும் நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.
இலங்கையில் வானொலி நாடகம் என்பது, மரபார்ந்த தன்மைகளால் ஒழுங்மைந்து ஒரு மைற்கல்லாக இருந்தும், அது தொடர்ச்சியான செயற்பாடின்றி இடையறுந்து எங்கோ தன்னைத் தேடும் ஒரு துறவியாக நிற்கின்றது. இந்தத் துறவியைக் கொண்டு விழுமியங்களையும் சமூக மாற்றத்தையும் நிறுவும் ஒரு முனைப்பையே முஸ்லிம் செயலகம் செயற்படுத்தியிருக்கின்றது அல்லது முயல்கின்றது.
இலங்கை முஸ்லிம்களின் இடப்பிரச்சினைகள், இருப்பு பிரச்சினைகள், இடப்பெயர்வு, சேரிவாழ்வு மற்றும் சமூக சகவாழ்வு என்பனவற்றினை தேடும் அலவுகோளுடன் முஸ்லிம் செயலகம், இலங்கை அபிவிருத்திக்கான ஊடக மன்றத்துடன் இணைந்து மேற்படி வானொலி நாடகப் பயிற்சியினை கண்டியில் தொடர்ச்சியாக மூன்று வாரங்களாக வார இறுதி நாட்களில் நடத்தியிருந்தது.
இப்பயிற்;;சிப் பட்டறையில் பல்கலைக்கழக மாணவர்கள், இளம் எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் என்று சுமார் 25பேர் கலந்து கொண்டதுடன், பயிற்சி முடிவில் சுமார் 15 முழுமையான நாடகப் பிரதிகள் வரையப்பட்டுள்ளன. நாடகம் என்ற ஒரு இலக்கிய யதார்த்த வடிவம் பற்றி ஆகக் குறைந்த அறிவுள்ளவர்களே இதில் கலந்து கொண்டனர். இவர்களின் தொடர்ச்சியான ஈடுபாடு, ஏற்பாட்டாளர்களின் முழுiயான ஒழுங்கமைப்பு மற்றும் பயிற்சியாளர் (வுசயiநெச) எம்.சீ.ரஸ்மின் அளவிடமுடியாத (சர்வதேச) பயிற்சிகள் என்பனவற்றின் பெறுபேறே இந்த 15 நாடகப் பிரதிகளாகும்.
மாற்றம் என்பது உறுதியானது. நான் மாற்றத்தை நம்புகிறேன் என்ற விஞ்ஞான பூர்வமான அணுகுமுறைகள், இட்சியத்துடன் இந்த பயிற்சிகள் வெற்றிபெற வழிசமைத்தது. இலங்கையில் வானொலி நாடகம் என்ற துறை மரணத்திலிருந்து மீண்டு பீனிக்ஸ் பறவையாக வேண்டும் என்பது இதன் இன்னொரு செய்தியாகும். அதற்கு உயிர்கொடுக்க கடைசியில் விஞ்சிப்போனது விரல் விட்டெண்ணத்தக்கவர்கள் மட்டுந்தான்.
நாடகம் என்பது ஒரு கலை என்ற மேலெழுந்தவாரியான வாசிப்பை உடைத்து அதற்குள் விஞ்ஞான முறையினை ஆட்படுத்தி அதன் புனைவினை மரபார்ந்த தன்மைகள் மற்றும் விதிகளில் இருந்து நெகிழ்த்தி, எளிய முறையிலான வடிவங்கள் ஊடாக இலங்கையில் எந்த ஒருவரும் வானொலி நாடகத்தினை எழுதலாம் என்ற ஒரு திருப்பத்தை இந்த வானொலி நாடகப் பயிற்சி வழங்கியிருந்தது.
வானொலி நாடகம் என்ற ஒன்றை ஒரு கலையாக பாரத்தலின்றி அது ஒரு விஞ்ஞானக் கலை என்று நோக்குமளவிற்கு அது வளர்ந்துள்ளது என்பதை கற்றுக் கொள்ள இயல்ந்தது. வானொலி நாடகத்தினை பெரும்பாலானவர்கள் புனைவு வடிவமாகவும் சினிமா என்றும் கருதியிருந்த பிரக்ஞையை மறுதலித்து அது யதார்த்தங்கள் ஊடறுக்கும் ஒலி - ஒளி என்று நிறுவியிருந்தது.
இலங்கையில் வானொலி நாடகம் என்ற பிரதி வடிவ முயற்சி மற்றும் செயற்பொறிமுறை வரன்ட நிலமாக காட்சி தந்து கொண்டிருந்த போதே இந்த வானொலி நாடகப் பயிற்சி நெறி நடாத்தப்பட்டமை, பாலைவனத்தில் பெய்த மழையாக இருக்கின்றது.
இந்நிகழ்வில் துணை வளவாளர்களாக அஷ்ரப் சிஹாப்தீன் மற்றும் புர்கான் பீவி ஆகிய வானொலி நாடக நடிகர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் வானொலி நாடகத்தின் அடிப்படைத் தன்மைகள் மற்றும் தங்கள் அநுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தவிரவும் ருளு யனை நிறுவனத்தின் இணைப்பாளர் அபுல் கலாம் முஸ்லிம் செயலகத்திற்கான இணைப்பாளர்கள் என்போரும் ளுனுதுகு இன் நிகழ்ச்சித்திட்ட உத்தியோத்தர் அஸ்ஜைன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வனொலி நாடகம் குறிப்பாக முஸ்லிம் வானொலி நாடகம் சமூகத்தின் பிரச்சினைகளை மிகத் துல்லியமாக அடையாளப்படுத்தத் துணிந்ததுடன், சமூக எதிர்பார்க்கையை வானொலி நாடகத்தின் ஊடகா எவ்வாறு காட்டுவது, அது சமூகத்தின் எவ்வாறான பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்துவது என்ற வௌ;வேறான கட்டங்களை தாங்கியிருந்தது.
வானொலி நாடகப் பயிற்சிப் பட்டறை என்று பார்க்கின்றபோது அது மரபார்ந்த ஊடகத்தை மட்டும் மையப்படுத்தியது என்ற வரம்பையும் தாண்டி, இது நவீன செல்நெறியின் குழந்தை, சர்வதேசம் முழுவதும் பின்தங்கிய மக்களது வாழ்வாதரத்தை கட்டியெழுப்புகின்ற ஒரு கருவி என்ற வியாக்கியானத்தை விதைத்தது. ஒரு உரையாடலாக அல்லது சினிமாவாக இந்த பயிற்சிப்பட்டறை இருக்காமல் அறிவுசார்ந்த சமூகத்தின் மீதான பாய்ச்சலை காட்டியது. நேரத்தின் மீதான காதலை தூண்டியிருந்தது.
இலங்கையில் வானொலி நாடகம் என்ற வரலாற்றிற்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்த எந்தியிருக்கின்றது. புதிய தலைமுறையினரின் பங்குபற்றலின்மை என்ற குறையை அல்லது இடைவெளியை நிரப்பி, வானொலி நாடகங்களை தொடர்ச்சியாக எழுதக்கூடிய ஒரு புதிய தலைமுறையை வெளிச்சம் போட்டிருக்கின்றது. இந்த வெளிச்சம் நிரந்தர வெளிச்சமாக மாறவேண்டும். அதற்கான களங்கள் உருவாக வேண்டும் என்பதே எமது அவா. வெற்றிச் சான்றிதழ்களுடன் காலங்கள் ஒழுகிவிடாது, சமூகத்தில் துவாரம் விழுந்துள்ள இடங்கள் மீது ஆக்கிரமிக்கின்ற ஒரு வீரியத்தை இந்த தலைமுறை வானொலி நாடகப் பயிலுனர்கள் பெற்றிருப்பர் என்பது காலத்தின் முன் அளிக்கப்படவுள்ள ஆற்றுகையாக பார்க்கலாம். 



திங்கள், 12 நவம்பர், 2012

வஸீ்ம் அக்ரம் கவிதைகள் மூன்று

1. மறக்க முடியாத காலைப் பொழுது
மரபுகளின் மாறிலியாய்
துயர நொடிகளை கடந்து
எனது விடியலின் நிறப் பொலிவை
உறங்கச் செய்கின்ற
எனது மறக்க முடியாத காலை, அது
எனக்குள் ஒளிர்ந்து இசைக்கின்ற பொழுதை
கொளித்தி அந்த உஷ்ணச் சுவையை
உண்டு மகிழ்ந்தது, அந்தக் காலை
என்னை அவிழ்த்துப் போட்டு
ஓடத்துவங்கினேன்
இறந்தவனின் பேய்க் காற்று
பைத்தியக்காரனின் உலரல்
என் மீது நிரம்பிப் பாய்ந்தது
வாழ்வின் இறுதிக் காட்சிகளுக்குள் ஓடியது
அந்த மறக்க முடியாத காலை
அது வசந்த விருட்சங்களுக்கு தீ மூட்டியது
என் புதிய காணங்களையும்
என் புதிய கனாக்களையும்
காற்றிடமிருந்து மீட்டெடுத்தேன்
எனது துக்கத்தின் தூதை காற்றில்
சிறகு உடைந்த பறவையாக்கி பறக்க விடுகிறேன்
அது தவழ்ந்து தவழ்ந்து பறத்தலுக்காய் போராடியது
எனது ஆத்மத்தை சுவரில் அறைகிறேன்
காலை எனக்கு கொடுரமான
செய்தியைக் கொண்டு வந்தது
அது வாழ்வில் மறக்க முடியாதது காலை

2. ஒக்டோபர் கறுப்பு

இரு தசாப்த
வரலாற்று வரைபடமிது
சற்று இழிவான பொழுதுகளிலே விழிக்கின்றோம்
இரவு புடைத்து தொங்கிய வானில்
ஒரு நட்சத்திரமாவது இருக்கவில்லை.
ஊனக் கண்களின் நட்சத்திரக் கனவுகள்
எங்கள் முகாம்ங்களைப் போல்
இருள் கவ்விக் கிடந்தன
வாழ்வின் எல்லா சுற்றுக்களுமாய்
நடந்த தடங்கள் மட்டும் மாறியிருக்க
கால் தடையம் அப்படியே
காயச் சுமைகளாக
காலத்தை கசக்கி எரிகின்றது

3. வசந்தம் விரியும் வரை
எனது தே(ந)சத்தின் கதவுகளை தட்டுகிறேன்
என்னோடு இருக்கின்ற இரகசியங்களை அழைத்துக் கொண்டு
கைவிடப்பட்ட எனது நிலத்தின் மீது
நே(த)சக் கரங்களை நீட்டுகிறேன்
நூற்றாண்டாய்ப் புதையுண்டு போன நிலத்தில்
இரத்த உறவுகளின் நேசங்களை
போரின் பிந்திய இழப்புக்களை
பரிவர்த்தணை செய்து
அழுகின்றது எனது ஆத்மா
மணல்ச் சாரல் வீசிக் கொண்டிருக்கின்றது
துர் நாற்றக் கட்டிலில்
புழுதிப் படுக்கையை விரித்து
ஒரு சொறி நாயுடன்
உறங்கிய இந்த இரவுகளை
எண்ணியே பித்தம் கசிகின்றது எனக்கு
இன்னும்
சிறு கற்கள் கொண்டு நிரப்பி
புதிய நாளுக்கான வார்ப்புகளை
கெஞ்சுகின்றது
நம்பிக்கை இழந்து
துயர் பச்சை கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றது
இனியாவது
வசந்த பூபாளக் காற்று வீசி
என் காலத்தில் காய்கின்ற
உலர்ந்த நாட் துணிகளை
உலர்த்திவிட்டு
வசந்த பூக்களுக்கு உரமூட்டுகின்றதா?